<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176</id><updated>2011-10-06T03:25:38.379-07:00</updated><category term='படித்ததில் ரசித்தவை'/><category term='எதிர்வினை'/><category term='ஏர்டெல்'/><category term='அபத்த களஞ்சியம்'/><category term='எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி'/><title type='text'>தும்பிக்கையாழ்வான்</title><subtitle type='html'>எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் 
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>10</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176.post-8392031594555118372</id><published>2011-08-13T04:09:00.000-07:00</published><updated>2011-10-06T03:25:38.426-07:00</updated><title type='text'>விக்கிபீடியா</title><content type='html'>&lt;div&gt;சமீப காலமாக சமுக வலைத்தளமான Facebook-ல் ஊர் மேய்ந்து கொண்டிருக்கிறேன். (என் பிளாக்கில் பதிவுகள் இடாததற்கு அதுவும் ஒரு காரணம் :) ) அதில் நிறைய பேர் தங்களுடைய கருத்துக்கு வலுசேர்க்கிறேன் என்று விக்கிபீடியாவில் உதாரணம் காட்டுவதை காண்கிறேன். விக்கிபீடியா உண்மையிலேயே சரியான தகவலகளை மட்டுமே தாங்கியிருக்கிறதா? என் அனுபவத்திலிருந்து இரு உதாரணங்கள்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குறிப்பு : இவை இரண்டுமே திரைப்படம் சம்பந்தப்பட்டவை. எல்லாருக்கும் புரியும் என்பதற்காக மட்டும் இல்லை. இவை இரண்டும் நான் கண்டுபிடித்தவை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உதாரணம் 1 : 1998-ல் வந்த ஜீன்ஸ் தமிழ் திரைப்படத்தை பற்றிய பக்கம்.&lt;/div&gt;&lt;div&gt;URL : http://en.wikipedia.org/wiki/Jeans_(film)&lt;/div&gt;&lt;div&gt;நம்மில் பலர் அறிந்தபடி இந்த படத்தில் “புன்னகையில் தீமூட்டி போனவளே” என்று ஒரு பாடல் உண்டு. ஹரிஹரன் பாடிய சோகப்பாடல் அது. youtube URL : http://www.youtube.com/watch?v=k04Hyq85zZg&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள விக்கிபீடியா url-ல் அப்பாடல் இடம்பெறவில்லை. சரி, எதாவது அவசரத்தில் விட்டிருப்பார்கள் என்று நான் கர்ம சிரத்தையாக அந்த பாடலைப் பற்றி அந்த பக்கத்தில் பதிந்து வைத்தேன். சில நாட்கள் கழித்து என் நண்பர் ஒருவருக்கு பெருமையுடன் அதைக் காட்டுவதற்கு எடுத்தால்... என்ன ஆச்சரியம்? நான் சேர்த்த அந்த பாடல் பற்றிய குறிப்பைக் காணோம்!! இன்று வரைக் காணோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உதாரணம் 2 : பிரபலப் பாடகி கே.பி. சுந்தராம்பாள் பற்றிய பக்கம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;URL : http://en.wikipedia.org/wiki/K._B._Sundarambal&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலே சொன்ன உதாரணமாவது பரவாயில்லை. யாரோ  ஒரு புண்ணியவான் இந்தப் பக்கத்தில், சுந்தராம்பாள் அவர்கள், நடித்த படங்களை லிஸ்ட் பண்ணும்போது திருவிளையாடல் படத்திற்கான லிங்க் கொடுக்கும்போது, தனுஷ் நடித்த “திருவிளையாடல் ஆரம்பம்” படத்தை குறிப்பிட்டிருந்தார்!! என்ன அறிவு?! அதையும் போய் சரி செய்து விட்டு வந்தேன். சில நாட்களில் அதுவும் undo செய்யப்பட்டிருந்தது. நல்லவேளை இப்போது அது சரி செய்யப்பட்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிச்சயமாக இவை இரண்டும் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று சொல்ல முடியாது. தவறுதலாகவே நிகழ்ந்திருக்கலாம். ஆனால் நாம் தெரிந்து கொண்டு பதிவிடலாமே? wikipedia-வை refer செய்து அடுத்த முறை பதிவிடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுங்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2984265244439106176-8392031594555118372?l=thumbikaiazhwan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/8392031594555118372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/8392031594555118372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/8392031594555118372'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2011/08/blog-post.html' title='விக்கிபீடியா'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176.post-1168282866718800460</id><published>2011-05-15T04:15:00.000-07:00</published><updated>2011-05-15T04:21:59.731-07:00</updated><title type='text'>மீண்டும்...</title><content type='html'>அடேயப்பா, எவ்வளோ நாள் ஆய்டுச்சு? சரி திரும்பவும் Posts போடலாம்னு இருக்கேன். இந்த முறை கொஞ்சம் மாறுதல்களை நீங்க பார்க்கலாம். ரொம்ப செந்தமிழ்-ல எழுதாம கொஞ்சம் casual-a எழுதலாம்னு இருக்கேன். பாக்கலாம். ஆக மொத்தம் இந்த தமிழ் சமுதாயத்த ஒரு வழி பண்ணாம விடப் போறதில்ல :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2984265244439106176-1168282866718800460?l=thumbikaiazhwan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/1168282866718800460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/1168282866718800460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/1168282866718800460'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2011/05/blog-post.html' title='மீண்டும்...'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176.post-1691610030189289644</id><published>2010-04-14T03:57:00.000-07:00</published><updated>2010-04-14T04:48:00.920-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏர்டெல்'/><title type='text'>ஏர்டெல்லும் நானும் - ஒரு security deposit கதை</title><content type='html'>இந்த முறை நான் செக்யூரிட்டி டெபாஸிட் க்காக பட்ட பாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏர்டெல் மூலமாக என் மொபைல் தவிர இன்னும் இரண்டு கனெக்‌ஷன்கள் வாங்கியிருந்தேன். அதில் ஒன்றை சிக்கனம் கருதி ப்ரீபெய்டாக மாற்றலாமென்று சைதாப்பேட்டை ஏர்டெல் அலுவலகத்திற்கு சென்றேன். அவர்களும் ஃபார்ம்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு “இன்னமு 24 மணி நேரத்திற்குள் ஆக்டிவேட் ஆகிவிடும்” என்று உறுதியளித்தார்கள். இந்த இரண்டு நம்பர்களுக்கும் செக்யூரிட்டி டெபாஸிட்டாக தலா ரூ.300 செலுத்தியிருந்தேன். அந்த டெபாஸிட் refundable என்று எனக்கு தெரியும். எனவே அந்த தொகை எப்படி எனக்கு திருப்பியளிக்கப்படும் என்று கேட்டபோதுதான் அதிர்ச்சி கிளம்பியது. “செக்யூரிட்டி டெபாஸிட் என்று எதுவும் உங்கள் இரண்டு நம்பர்களிலும் இல்லை” என்று தெரிவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செக்யூரிட்டி டெபாஸிட் வாங்காமல் எப்படி இந்த இரண்டு நம்பர்களும் ஆக்டிவேட்டடாக இருக்கும் என்று கேட்டபோது, “உங்கள் ஏர்டெல் ஏஜெண்ட் இந்தத் தகவலை அப்டேட் செய்யாமல் அந்த தெகைகளை எடுத்துக் கொண்டிருக்கலாம்” என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். அந்த ஏஜெண்ட் எனக்கு நல்ல பழக்கம். எனவே அவரைத் தெடர்பு கொண்டபோது , “இதில் ஏதோ குழப்பம் இருக்கிறது, நிச்சயமாக என்னிடம் தெகை வாங்காமல் அவர்கள் ஆக்டிவேட் செய்யவே மாட்டார்கள்” என்று உறுதியாக சொன்னதோடு அதை கன்ஃபார்ம் செய்வதாகவும் சொன்னார். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக திருச்சிக்கு மாற்றலாகி சென்றதால் அந்த தகவல்களைப் பெற மிகவும் ப்ரயத்தனம் செய்யவேண்டியதாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுமையிழந்த ஏர்டெல் வாடிக்கையாளர் மையத்தை தெடர்பு கொண்டபோது அவர்களும் சரியான வகையில் பதில் சொல்லவில்லை. எரிச்சலான நான் அந்த கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவை அவர் மேலதிகாரிக்கு கனக்ட் செய்ய சொல்லி அந்த மேலதிகாரியை மிகக் கடினமான முறையில் பேசியபின் அந்த அதிகாரி பல தகவல்களை சரிபார்த்து பின் “உங்கள் டெபாஸிட் ஆரம்பத்திலேயே எங்களை வந்தடைந்து விட்டது. எங்கள் விதிமுறைப்படி அது முறையே 4,5 மற்றும் 6ம் மாதங்களில் உங்களுக்கு பில்லில் அட்ஜெஸ்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் எக்காரணத்தினாலோ அது நடைபெறவில்லை” என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் அயற்சியுடன் நான் “இப்போது என்ன செய்யலாம்? என் ஒரு நம்பர் இன்னமும் போஸ்ட் பெய்டாக இருக்கிறது ஆனால் மற்றொன்று ப்ரீபெய்டாக மாறிவிட்டது” என்ற போது அவர் சொன்ன பதிலில் என் சோர்வெல்லாம் பறந்து மீண்டும் மூர்க்கம் வந்துவிட்டது. அவர் சொல்கிறார், “சார், உங்கள் போஸ்ட்பெய்ட் நம்பரில் இதை எப்படி அட்ஜெஸ்ட் செய்வது என்று கட்டாயம் பார்க்கிறேன்!! ஆனால் உங்கள் ப்ரீபெய்ட் நம்பருக்கு இது சாத்தியம் என்று தோன்றவில்லை!!!”. மீண்டும் நான் கத்த ஆரம்பித்தேன். “அது என்னுடைய பணம். என்ன ஆனாலும் சரி அது என்னிடம் வந்தாக வேண்டும் இல்லையென்றால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்றவுடன் அவர் “நான் நிச்சயம் ஏற்பாடு செய்கிறேன்” என்று (வேறு வழியின்றி) உறுதியளித்தார். அதோடு இந்த ஏற்பாட்டை செய்து விட்டு உங்களுக்கு நிச்சயம் அப்டேட் செய்கிறேன் என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை, இரண்டொரு நாட்களில் அந்த தொகை என் ப்ரீ பெய்ட் நம்பருக்கு டாக் டைமாக கிரெடிட் ஆகி விட்டது. மேலும் என் போஸ்ட் பெய்ட் நம்பருக்கு அது அடுத்த மாத பில்லில் அட்ஜெஸ்ட் ஆகி விட்டது. ஆனால் அந்த புண்ணியவான் இன்று வரை எனக்கு கால் செய்யவே இல்லை :)&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எழுந்த சில கேள்விகள் பின்னே...&lt;br /&gt;&lt;br /&gt;1. அந்த டெபாஸிட் தொகை பற்றி கடை நிலை வாடிக்கை மைய சேவை அதிகாரிக்கோ அல்லது சைதாப்பேட்டை அலுவலகம் போன்ற ஏர்டெல் அலுவலக ஊழியர்களுக்கோ ஏன் தெரியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;2. நல்ல வேளை எனக்கு அந்த ஏஜெண்ட் மொபைல் இருந்ததால் நல்லதாகி போனது. ஒருவேளை அந்த நம்பர் இல்லையென்றாலோ, அல்லது அவர் நம்பரை மாற்றியிருந்தாலோ அல்லது அவர் அந்த வேலையை விட்டு வேறு வேலைக்கு மாறியிருந்தாலோ என் கதி என்ன? (ஏர்டெல்லை விசாரித்த போது ஏஜெண்ட் தொடர்பான விவரங்களை அவர்கள் சேமிப்பதில்லை என்று சொன்னார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;3. என்னதான் ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட், ப்ராட் பேண்ட் என்று தனித்தனி துறைகளில் சேவைகள் வழங்கினாலும், உபயோகிப்பாளர்களைப் பொறுத்தவரை ஏர்டெல் என்பது ஒரு நிறுவனம்தான். அப்படியிருக்கையில், இது போஸ்ட்பெய்ட் எனவே அந்த துறையை தொடர்பு கொள்ளுங்கள் என்று அலைக்கழிப்பது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்டெல் என்று இல்லை, எந்த மொபைல் சர்வீஸ் பயன்படுத்துபவர்களும், பின் வருவனவற்றை நினைவில் கொள்வது அவர்களுக்கு நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;1. Refundable deposit சரியாக அப்டேட் ஆகிவிட்டதா என்று புது கனெக்‌ஷன் வாங்கும் போது கன்ஃபார்ம் செய்து கொள்ளவும்&lt;br /&gt;2. உங்கள் ஏஜெண்ட் கான்டாக்ட் நம்பர் மட்டுமல்லாது அவரது அலுவலக (ஏஜென்ஸி) நம்பரையும் சேர்த்து வாங்கிக்கொள்ளுங்கள்&lt;br /&gt;3. ப்ரீ பெய்ட் -&gt; போஸ்ட் பெய்ட் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றாதீர்கள் :) அப்படி வேண்டுமென்றால் புது கனெக்‌ஷன் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்திற்கு உங்களுடைய ஒரு கான்டாக்ட் வீதம் உங்களுடைய புது நம்பரை எஸ் எம் எஸ் செய்தால் கூட, ப்ரீ பெய்ட் -&gt; போஸ்ட் பெய்ட் கன்வர்ட் ஆகுவதற்குள் முடித்துவிடலாம்&lt;br /&gt;4. போஸ்ட் பெய்ட் -&gt; ப்ரீ பெய்ட் மாற்றத்தின் போது, கட்டவேண்டிய நிலுவைத் தொகை எவ்வாறு கட்டவேண்டும் மற்றும் உபரித் தொகை எதுவும் இருப்பின் எவ்வாறு உங்களுக்கு திருப்பியளிக்கப்படும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். மேலும் 24 மணி நேரம் என்று சொன்னாலும், சனிக்கிழமை ஒரு விசேஷ தினம். அன்று நீங்கள் ரெக்வஸ்ட் கொடுத்தால், திங்கள்கிழமை தான் கிடைக்கும் ஏனென்றால் ஞாயிறு அவர்கள் வேலைபார்ப்பதில்லை. ஞாயிறு விடுமுறை என்பது நல்ல செய்திதான். ஆனால் அவர்கள் இந்த விஷயத்தை உங்களுக்கு நினைவுறுத்த மாட்டார்கள். நீங்களே உங்கள் சொந்த முயற்சியில்தான் தெரிந்து கொள்ள வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விட முக்கியம் ஏர்டெல் ஏறத்தாழ ஒரு கடவுள் போல. அது தடுக்க நினைப்பதை யாராலும் உங்களுக்கு கொடுக்க முடியாது, அது கொடுக்க வேண்டியதை, அது ஒரு போதும் கொடுக்க நினைக்காது :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2984265244439106176-1691610030189289644?l=thumbikaiazhwan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/1691610030189289644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2010/04/security-deposit.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/1691610030189289644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/1691610030189289644'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2010/04/security-deposit.html' title='ஏர்டெல்லும் நானும் - ஒரு security deposit கதை'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176.post-5983953468993038994</id><published>2010-03-13T09:21:00.000-08:00</published><updated>2010-03-13T23:39:39.010-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏர்டெல்'/><title type='text'>ஏர்டெல்லும் நானும் - ஒரு caller tune கதை</title><content type='html'>நான் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளன். என்னதான் ஏர்டெல் நல்ல முறையில் சேவைகளை வழங்கினாலும் சில சமயம் அவர்கள் அடிக்கும் கூத்திற்கு அளவேயில்லை. எனக்கு பிடித்த ஒரு பழைய படலை என் மொபைலில் காலர் டியூனாக வைத்திருந்தேன். அவ்வப்போது, “* மற்றும் 9-ஐ அழுத்தி இந்தப் பாடலை காப்பி செய்யவும். பாடலுக்கு 15 ரூபா மாதம் 30 ரூபா” என்று ஒரு பெண் விளம்பரம் செய்வாள். சரி நம்ம வச்ச பாட்டுக்கு ஒரு விளம்பரம்-னு பார்த்தா, இப்போ கொஞ்ச நாளா, அந்த பொண்ணு எல்லா காலுக்கும் அப்படி சொல்லிக்கிட்டு இருக்கா... (எல்லாருக்குமே இது நடந்துகிட்டு இருக்கு). முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த சேவைக்கு பணமும் நம்மகிட்ட இருந்து வாங்கிக்கிறாங்க. மேற்கொண்டு அவங்களுக்கு விளம்பரமும் செஞ்சுக்கிறாங்க... அந்த பொண்ணு பேசுற அந்த வாக்கியம் ஒரு 5 செகண்ட் வருதுன்னு வச்சுக்குவோம். அதுக்குள்ள நம்ம போன் எடுத்துட்டா நாம காலர் ட்யூன் செட் பண்ணினதுக்கு அர்த்தமே இல்லாம போய்டும். ரொம்ப கடுப்பாயிடுச்சு.  அப்புறம் ஏர்டெல் கஸ்டமர் கேர்-க்கு, போன் பண்ணி திட்டினதுக்கு பின்னே இப்போ எனக்கு இந்த பிரச்சனை இல்லை.&lt;br /&gt;ஆனா மத்தவங்களுக்கு இந்த பிரச்சனை இன்னமும் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்டெல் இதுக்கு ஒரு வழி பண்ணினா பரவாயில்ல&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு : இது போல எனக்கு ஏர்டெல்-கும் நிறைய காமெடி நடந்திருக்கு. அதையல்லாம் அப்பப்போ இதே டைட்டில்ல போடுறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2984265244439106176-5983953468993038994?l=thumbikaiazhwan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/5983953468993038994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/5983953468993038994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/5983953468993038994'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2010/03/blog-post.html' title='ஏர்டெல்லும் நானும் - ஒரு caller tune கதை'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176.post-6696388969068008483</id><published>2010-02-14T03:55:00.001-08:00</published><updated>2010-02-14T04:31:09.803-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் ரசித்தவை'/><title type='text'>படித்ததில் ரசித்தவை கண்ணீர் - பகுதி 2</title><content type='html'>1) காதல் குருடாக இருக்கும்; நம்பிக்கை பைத்தியமாக இருக்கும்... ஆனால் நம்பிக்கை பைத்தியமாக இருப்பதனால்தான் உலகம் நடக்கிறது. அது கெட்டிக்காரத்தனத்துடன் இருந்தால், உலகம் முழுவதற்குமே பைத்தியம் பிடிக்க நேரும்! - பக் - 99&lt;br /&gt;&lt;br /&gt;2) குழந்த்தையின் முன்னே வறுமை பற்றிக் கழறுதல் அழிக அழிக!  - பக் -103&lt;br /&gt;&lt;br /&gt;3) திரௌபதியின் மானத்தைக் காக்க இறைவன் சேலைகளைச் சுரந்தன் என்று வெறுமே கேள்வியுறுகிறோம். தெருவில் போகும் பிச்சைக்காரியின் மானத்தைப்பற்றி அவன் ஏதும் அக்கறை கொள்வதில்லை!  - பக் -117&lt;br /&gt;&lt;br /&gt;4) நாலுபேர் வளைய வரும் வீட்டில் ஒருவருக்கு மட்டும் சமைத்துக் கொடுக்க, என் பாட்டி எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. தவிரவும், தனியாக உண்பதற்கு இவருடைய தந்தையும் இவருக்குக் கற்பிக்கவில்லை! - பக் -117&lt;br /&gt;&lt;br /&gt;5) சிறுவர்களின் பிடிவாதம் எங்கே தீருமோ அத்தகைய இடத்தில் இறைவன் குழந்தைகளைப் பிறப்பிக்க வேண்டும். எங்களைப் போன்ற வறியர்வகளின் வீட்டில் இந்தச் சிறு ஜீவன்களை அவன் எதற்குப் பிறப்பிக்கிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;6) முகத்தைப் பார்த்து என்ன சொல்ல முடியும்? நீரில் நனைத்துச் சமைக்கும்போதுதான் கெட்டுப்போன தானியங்கள் எவை என்று தெரிய வரும்! - பக் -122&lt;br /&gt;&lt;br /&gt;7) உலகம் என்பது ஒரு வேடிக்கை விளையாட்டு; அதில் அனைவருமே பணத்தின் தாளத்திற்கேற்பக் குதிக்கிறர்கள். நாட்டிய மங்கையர்போல! தலைவன், எழுத்தாளன், பத்திரிக்கையாளன், கலைஞன் ஆகிய யாவருமே ஒரே மாலையில் கோத்த மணிகள் என்று நினைக்கிறேன். இவர்கள் யாவரையுமே நான் இழிவுடன் பார்க்கிறேன். - பக் -124&lt;br /&gt;&lt;br /&gt;8)நல்லவர்கள் சிறு பையன்களைப் போன்றவர்களே என்பதுதான் உண்மை! ... வேஷம் போடுகிறவர்கள்-போராட்டம் நிறைந்த உலகை நாம் எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள்-கிழவர்களேயாவர்! - பக் -127&lt;br /&gt;&lt;br /&gt;9) மாந்தரின் உணர்ச்சிகள், பார்வையை விடவும் ஸ்பரிசத்தினால் மிகவும் தீவிரமாக வெளியாகின்றன. - பக் -128&lt;br /&gt;&lt;br /&gt;10) மனிதனுடைய நாக்கு மிகவும் சபலமுடையது. நெய்யும் போளியும் அதற்குப் பழக்கமாகிவிட்டால், உப்பும் சோறும் அதற்குப் பிடிக்காது. ஆனால் நாளைக்கு ஆண்டவன் உப்பே கொடுக்காமல் வெறும் சோறே கொடுத்தாலும் அதை நான் ஆனந்தமாக உண்பேன். ஆயினும் உப்புக் கேட்க எவர் வாசலுக்கும் போகமாட்டேன் - பக் -144&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2984265244439106176-6696388969068008483?l=thumbikaiazhwan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/6696388969068008483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2010/02/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/6696388969068008483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/6696388969068008483'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2010/02/2.html' title='படித்ததில் ரசித்தவை கண்ணீர் - பகுதி 2'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176.post-1959891565433190592</id><published>2010-02-09T18:02:00.000-08:00</published><updated>2010-02-09T18:18:04.535-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அபத்த களஞ்சியம்'/><title type='text'>அவதாரத்தின் அவதாரமே...</title><content type='html'>சமீபத்தில் (7-2-2010 என்று நினைக்கிறேன்), ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கண்ணதாசன் பற்றி பேச்சு வந்தது. கண்ணதாசனைப் பற்றி போற்றியும் புகழ்ந்தும் பல பேர் பேசினார்கள்.  அவர்களில் முத்தாய்ப்பாக பேசியது, பிரபல ஜோதிடர் சிவல்புரி சிங்காரம்!!!  “கண்ணதாசனே! நீ கண்ணனுக்கு தாசன் இல்லை. கண்ணனின் அவதாரமே!!!” என்று சொல்லி பின்பும், கண்ண பரமாத்மாவையும், கண்ணதாசனையும் ஒப்பிட்டு நிறைய சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் என்பது விஷ்ணுவின் அவதாரம், இவர் கண்ணனின் அவதாரம் என்றால் கண்ணதாசன் “அவதாரத்தின் அவதாரமோ”?. இது என்ன “ரத்தத்தின் ரத்தமே”, “தமிழின் தமிழே” என்பது போல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று, கண்ணதாசன் இன்று இருந்திருந்தால், நிச்சயம் தலையில் அடித்துக் கொண்டிருப்பார். என்னதான் அவரிடம் வேண்டாத விஷயங்கள் பல இருந்தாலும், கண்ணனின் மேல் கொண்ட பக்தி, இந்து சமயத்தில், ஆன்மீகத்தில் அவர் கொண்ட நம்பிக்கை அளப்பரியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவல்புரி சிங்காரம் அவர்களிடம் ஜோதிடம் பார்க்க செல்பவர்கள் சற்று யோசியுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2984265244439106176-1959891565433190592?l=thumbikaiazhwan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/1959891565433190592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/1959891565433190592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/1959891565433190592'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2010/02/blog-post.html' title='அவதாரத்தின் அவதாரமே...'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176.post-6743823842491466161</id><published>2010-02-06T21:19:00.000-08:00</published><updated>2010-02-06T22:22:29.420-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் ரசித்தவை'/><title type='text'>படித்ததில் ரசித்தவை - கண்ணீர் - பகுதி 1</title><content type='html'>நூல் : கண்ணீர்&lt;br /&gt;ஆசிரியர் : வி.ஸ.காண்டேகர்&lt;br /&gt;அல்லயன்ஸ் பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் எனும் இந்த நாவல் ஒரு ஏழையான ஆசிரியன் மற்றும் அவன் சார்ந்தோரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டுள்ளது. படிப்போரை “நேர்மையாக இருங்கள்” என்றோ “நேர்மையாக இருந்தால்தான் நல்லது” என்றோ அறிவுரை செய்யாமல் “நேர்மையாக இருத்தலே வசதியாக/சௌகரியமாக உள்ளது” என்று அறிவுறுத்தும் ஒரு நூலாக உள்ளது.&lt;br /&gt;It is just suggesting than advising.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலில் எனக்குப் பிடித்த மற்றும் நான் மிகவும் ரசித்த வரிகள் கீழே. இவ்வரிகளில் இந்த post-க்கு தகுந்தாற்போல் சில இடங்களில் சுருக்கியும், வார்த்தைகளை இட்டும் நிரப்பியுள்ளேன். கீழ்கண்ட வரிகளைத் தவிரவும் நிறைய அருமையான கருத்துகள், எண்ணங்கள் இந்நூலில் உள்ளன. தவறாமல் படித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ரசித்த வரிகள் எண்ணிக்கையில் நிறைய என்பதால் பகுதி, பகுதியாக வெளியிடுவதாக உத்தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;1) தெய்வம் மனிதனுக்கு நாக்கைக் கொடுத்தது தவறு. இந்த உலகில் உண்மை பேசுகிறவை கண்கள் மட்டுமே. - பக் - 13&lt;br /&gt;&lt;br /&gt;2) சில குழந்தைகள் பல நிறமுள்ள கண்ணாடித் துண்டுகளை திரட்டி வைக்க விரும்புவார்கள், பெரியவர்களும் அப்படித்தானோ? கனவுகள், நம்பிக்கைகள், விருப்பங்கள் ஆகியவற்றின் பளபளப்பான துண்டுகளை வைத்துக் கொண்டு அவற்றுடன் விளையாடுவதில் இன்பம் காண்பார்களோ? - பக் -17&lt;br /&gt;&lt;br /&gt;3) அழுகிய மாம்பழத்தின் அருகில் வைத்தால் நல்ல மாம்பழமும் கெட்டுவிடும்.- பக் -18&lt;br /&gt;&lt;br /&gt;4) தீயவெறியில் சிக்கியவன் இன்று யானையில் வலம் வருவான். ஆனால் மறுநாள் யானை இவன் மேல் ஏறும்.- பக் -18&lt;br /&gt;&lt;br /&gt;5) வியர்வை சொட்டி விளைவது பொன். மீதி அத்தனையும் மலம்.- பக் -19&lt;br /&gt;&lt;br /&gt;6) வாழ்க்கை என்பது சூதாட்டம். துன்பம் என்பது அதில் தோல்வி. அதை மனிதன் எவரிடமும் சொல்லக்கூடாது. இன்பம் என்பது சூதாட்டத்தில் வெற்றி. அதை வேண்டுமானால் உலகம் முழுமைக்கும் கூறலம். மனிதன் இன்பத்தைப் பங்கு போடலாம். ஆனால் துன்பத்தைத் தனியாகவே அனுபவிக்க வேண்டும்.- பக் -21&lt;br /&gt;&lt;br /&gt;7) வயதான பெண் என்பவள் (பெற்றோருக்கு) மார்பில் எரியும் நெருப்பு.- பக் -24&lt;br /&gt;&lt;br /&gt;8) கெட்ட பழக்கமுள்ளவர்களின் மனம் எப்போதும் அஞ்சும். காட்டில் இலை விழுந்தாலும் காதைத் தூக்கிக் கொண்டு ஓடும் முயல் போல, அது எதையெடுத்தாலும் கலங்கிப் போகும்.- பக் -25&lt;br /&gt;&lt;br /&gt;9) மனிதனுக்கு தலை ஒன்றுதான்; ஆனால் நாக்குகள் ஆயிரம் - பக் -28&lt;br /&gt;&lt;br /&gt;10) காதலின் உண்மையான காவியம் ஸ்பரிசத்தில் இருக்கிறது.- பக் -29&lt;br /&gt;&lt;br /&gt;11) மாந்தரின் இயல்பு எவ்வளவு ஏமாற்றமானது? பிறரை மட்டுமின்றித் தன்னையே அது ஏமாற்றிக் கொள்கிறது.- பக் -29&lt;br /&gt;&lt;br /&gt;12) நட்பு எப்போதும் நிலவு போலத் திருட்டுத்தனமாக வாழ்வில் வருவதில்லை. அது வெயில் போல வெளிப்படையாக மேளதாளத்துடன் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;13) மனம் சிந்திப்பதைப் போல் பகைவனும் சிந்திக்க மாட்டான்.- பக் -33&lt;br /&gt;&lt;br /&gt;14) காதல் பயந்தாங்கொள்ளித்தனமுள்ளதா? காதல் குருடு என்பதனாலா? உலகம் முழுவதும் அது ஆட்சி செலுத்துகிறது என்க்றார்களே! ஆனால் அதன் ஆட்சியில் குறைந்த்தது மூன்று மேருக்குக் கூட இடம் இல்லை; அந்தப் பரந்த உலகில் இருவர் மட்டுமே ஏன் வாழ்கிறார்கள்?- பக் -37&lt;br /&gt;&lt;br /&gt;15) மனிதனுடைய அமுங்கிய ஆவல் எவ்வகையிலாவது வெளிவராமல் இருக்காது என்று பிராய்டு சொல்வது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். - பக் -39&lt;br /&gt;&lt;br /&gt;16) இந்தக் கவிகள் யாவரும் வாழ்க்கயை உள்ளபடி ஏன் சித்தரிப்பதில்லை? அதில் காவியம் இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா? அரக்கனது பிடியிலிருந்து ஊர்வசியை மீட்கும் அரசன், ரேஷனுக்கு வேண்டிய பணத்தை சிரித்த முகத்துடன் சேர்க்கும் குமாஸ்தா - இந்த இருவரில் அதிக வீரன் எவன்?- பக் -41&lt;br /&gt;&lt;br /&gt;17) பிச்சையெடுத்து போளி உண்பதை விடக் கஷ்டப்பட்டு பழஞ்சோறு உண்பது நல்லது - பக் -43&lt;br /&gt;&lt;br /&gt;18) பலவீனத்தின் மறுபெயர்தான் நல்லதனம் என்பது. - பக் -45&lt;br /&gt;&lt;br /&gt;19) இந்த்க் குழந்தையுலகம் எத்தனை அழகியது! அதிலுள்ள கண்ணீர் பனித்துளி போசவும், ஆவல்கள் பல நிறமுள்ள பூப்பறவைகள் போலவும் மகிழ்ச்சி பவழ மல்லிகை போலவும் இருக்கின்றன. அந்த வயதில், சிவப்பு பென்சிலின் துணுக்கின் உம்பு அரசனின் செங்கோல் இழிவாகத் தெரிகிறது. தாயின் மென்மையான ஸ்பரிசத்தில் சொர்க்கத்துச் சுகமனைத்தும் நிறந்திருப்பதாக அப்போது தோன்றுகிறது. - பக் -52&lt;br /&gt;&lt;br /&gt;20) மனிதனது மனம் எவ்வளவு பழங்காலத்தது! காலம் கணந்தோறும் முன்னால் ஓடுகிறது; ஆனால் மனம் மட்டும் ஏதாவது பழைய பிரியமான இடத்தில் குழம்பி நிற்கிறது!- பக் -53&lt;br /&gt;&lt;br /&gt;21) உண்மையான காவியம் காதலின் முதல் மலர்ச்சியில் இல்லை; அது குடும்பத்தில், அந்த மலர்களின் நிர்மால்யாத்தில் இருக்கிறது; இன்ப துன்பங்கள் கலந்த கண்ணீரில் இருக்கிறது. - பக் -56&lt;br /&gt;&lt;br /&gt;22) உலகில் ஒவ்வொருவனும் தன்னைப் பெரியவனாகவே மதிக்கிறான்.- பக் -60&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;(தொடரும்...)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2984265244439106176-6743823842491466161?l=thumbikaiazhwan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/6743823842491466161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2010/02/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/6743823842491466161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/6743823842491466161'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2010/02/1.html' title='படித்ததில் ரசித்தவை - கண்ணீர் - பகுதி 1'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176.post-8524699826549379980</id><published>2009-11-07T04:46:00.000-08:00</published><updated>2010-02-14T03:52:33.171-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எதிர்வினை'/><title type='text'>அறிவுஜீவித்தனமான ஆபாசம்!!!</title><content type='html'>சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோஹன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. மறைந்த திருமதி M.S.சுப்புலெக்‌ஷ்மி அவர்களது ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றியது. அவர் ஜாதியைப் பற்றியும் அவர் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றியுமானது. கட்டுரை, ஜார்ஜ் என்பவரின் புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட (அ) அதிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை அளிக்கும் கட்டுரை. இக்கட்டுரையை &lt;a href="http://www.jeyamohan.in/"&gt;www.jeyamohan.in&lt;/a&gt; website-ல் படிக்கலாம். இக்கட்டுரை எது ஆபாசம் என்று யோசிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஆபாசம் என்று எதை சொல்கிறோம்? திரைப்படங்களில்/கதைகளில் வரும் மலிவான ரசனையுள்ள காட்சிகளை/பாடல்களை அல்லது வசனங்களை சொல்கிறோம். ஆனால் பத்திரிக்கைகளில் அல்லது இவை போன்ற இணையதளங்களில் வருபவற்றை பற்றி நாம் பெரிதும் அலட்டிக்கொள்வதில்லை. ஒரு மலிவான வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ள கதை/திரைப்படக்காட்சி ஆபாசமென்றால், ஆபாசமான கருத்தை பரப்பும் கட்டுரையும் அவ்வாறுதானே கொள்ள வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இக்கட்டுரை எவ்வாறு ஆபாசமென்று சொல்கிறாய்? M.S-ன் வாழ்க்கையைத் தானே இது சொல்கிறது? மேலும் அக்கட்டுரையாளர் ஆபாச வார்த்தைகளை உபயோகிக்கவில்லையே? என்று கேட்பவர்களுக்கு,&lt;br /&gt;ஒரு கட்டுரை அல்லது ஒரு விஷயத்தை ஒருவர் சொல்ல முற்படுகையில் அவரது உள்நோக்கம் முதலில் அறியப்பட வேண்டும். உதாரணமாக, கலைஞர் TV-ல் சில தினங்கள் முன்பு அவர்களது பூதக்கண்ணாடி என்னும் நிகழ்ச்சியில் கோவிலில் முறைகேடாக நடந்துகொண்ட ஒரு அர்ச்சகரை பற்றி நிகழ்ச்சி வந்தது. அதற்கான விளம்பரங்களை பார்த்தாலே அதன் உரிமையாளர்கள் சொல்லவரும் கருத்து வெளிப்படும். முதலில் கோவில் பற்றி பராசக்தி படத்தில் (கருணாநிதி எழுதிய) சில வசனங்கள் வரும். பிறகு இச்சம்பவம் பற்றி சில shots காட்டப்படும். மேலும் ஒரு அறிவிப்பு - விறுவிறுப்பான காட்சிகள் - வேறு.&lt;br /&gt;இது ஒரு நிகழ்ச்சிக்கான விளம்பரம் எனும்போது எதற்காக specific-காக பராசக்தி வசனங்கள். கோவில் என்றாலே இவ்வகை நிகழ்ச்சிகள் நடைபெறும்; அதனால்தான் எங்கள் தலைவர் அவ்வாறு வசனம் எழுதினார் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். மேலும் விறுவிறுப்பான காட்சிகள் என்றால் என்ன சொல்லவருகிறார்கள்? அங்கு பதிவாக்கப்பட்ட காட்சிகளை காட்டப்போகிறோம், தவறாமல் பாருங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”வெள்ளித்திரை” படத்தில் ஒரு வசனம் வரும். வார்த்தைகள் முழுதும் ஞாபகமில்லை. “நாம் சிரிக்க வைக்க முயலும் இடத்தில் மக்கள் சிரிக்கிறார்கள், அதே போல் அழுவதும். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைத்து நாம் ஆபாசமாக காட்சிகளை வைக்கிறோம்” என்பதாக வரும் அவ்வசனம். அதே கலைஞர் TV-ல் வந்த்து ஒரு சுவையான முரண்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரை கூட அந்த ரகத்தை சார்ந்தது என்பது என் எண்ணம். சாதரணமாக ஆபாச விஷயங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1. திரைப்பட காட்சிகள்/வசனங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை மிகவும் ஆரம்ப நிலையில் உள்ளவை. மிகவும் பலவீனமான மனம் இவற்றில் அடிமைப்பட்டுவிடும். மேலும் இவற்றை தயாரிக்க மிகவும் படிப்பறிவு தேவையில்லை. ஆனால் அதேபோல் இவை அதிக நேரம் நம்மனதில் நிற்பதில்லை அல்லது மனதில் நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. (இல்லையென்றால் இந்நேரம் உலகமே அழிந்திருக்கும். இவற்றின் எண்ணிக்கை அவ்வளவு). மேலும் இவற்றின் accessibility கொஞ்சம் கஷ்டம். சமூகம் இதை அனுமதிக்காது. மேலும் பெற்றோரைத் தாண்டி இவற்றை அடைவது மிகக்க‌ஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2. பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரிவில் நான் குறிப்பிடுவது சினிமா பாடல்கள், காட்சிகள், நடன மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள், மெகா தெடர்கள் – அவற்றின் காட்சியமைப்புகள் ஆகியவை. இவையும் ஒரு வகையில் ஆரம்ப நிலைதான். ஆனால் இவற்றின் accessibility இவற்றின் ஆபத்தின் அளவை அதிகரிக்கின்றன. நாம் இவற்றினை தேடிப்போக வேண்டியதில்லை. காசு கொடுத்து நம் வீட்டிற்கே வரவழைத்து விடுகிறோம்.இவற்றைத் தயாரிக்க கொஞ்சம் மெனக்கெட வேண்டுமென்பதால்,இவற்றின் ஆபத்து அளவும் அதிகம்தான். இருப்பினும் பெற்றோர்கள் நினைத்தால் இவற்றை தடுத்து விடும் வழியிருப்பதால் இவையும் கட்டுப்படுத்தக் கூடியவையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3. அறிவுஜீவித்தனமான ஆபாசங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை கொஞ்சம் கவலையளிப்பவை. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, பெரியவர்களுக்கு கூட இதன் ஆபத்து இன்னும் சரியாக தெரியவில்லை என்பதுதான்.&lt;br /&gt;பத்திரிக்கைகளில், இணைய தளங்களில் வரும் கட்டுரைகள்,&lt;br /&gt;செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள், செய்திகள் பரப்பப்படும் முறைகள்&lt;br /&gt;அறிவுஜீவிகள் என்று அறியப்படுபவர்களின் கட்டுரைகள்,&lt;br /&gt;அவர்களால் இயக்கப்படும் திரைப்படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போன்றவை இதில் அடங்கும். இதன் ஆபத்து அளவு மிக மிக அதிகம். இவை மனதில் பெரிய அளவு பாதிப்புகளை பெரும்பாலும் ஏற்படுத்துகின்றன. மேலும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்துவதும் மிக மிக குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான பெற்றோர்களுக்கு தம் குழந்தைகள் இணைய தளங்களில் அல்லது பத்திரிக்கைகளில் என்ன வாசிக்கின்றனர் என்பது பற்றி தெரியவில்லை. அதாவது அந்த அளவு தொழில்நுட்ப அறிவு போதவில்லை. மற்றொரு சாரார் நிலை இன்னமும் மோசம். அவர்களுக்கு தெரிந்தாலும் அவற்றை சரியா, தவறா என்று மதிப்பீடு செய்யத் தெரியவில்லை. மலிவான ரசனையுள்ள ஒரு திரைப்படத்தை பார்க்கும் ஒரு இளைஞனை விட இயக்குனர் ஷங்கரின்/மணிரத்னத்தின் திரைப்படத்தைப் பார்க்கும் ஒரு இளைஞனை நாம் comparatively நல்லவன் என்று நினைக்கிறோம். மலிவான ஒரு பத்திரிக்கையை படிக்கும் ஒருவனை விட ஆனந்த விகடன் படிக்கும் ஒருவனை நல்லவன் என்று சொல்கிறோம். ஆனால் உண்மை அதுதானா? நான் நிச்சயம் இல்லையென்றுதான் சொல்வேன். அதாவது பிந்தையவனைவிட முந்தையவன் நல்லவன் என்று இல்லை. இருவருமே சரிசமமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பதே உண்மை. இருவருமே ஒரே நிலையை எய்துவது சாத்தியம் எனும் நிலையில் ஒருவனை மட்டும் நல்லவன் என்று சொல்வது அநியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தோடு சேர்ந்து ஷங்கரின் திரைப்படத்தை (பாய்ஸ் மட்டுமென்றில்லை) பார்ப்பது, ஒரு இளைஞன் தனியாக சென்று ஒரு மலிவான ரசனையுள்ள திரைப்படத்தை பார்க்கும் அளவு கேவலமானது. மணிரத்தினத்தின் திரைப்படங்கள் மிகச்சில மட்டுமே விதிவிலக்கு. தற்போது ராதாமோகனை கொஞ்சம் சொல்லலாம்.மற்றபடி அனைவருமே ஆபாசம் கலந்துதான் எடுக்கிறார்கள். (இதைப்பற்றி வேறொரு post-ல் எழுத முயற்சிக்கிறேன்.)&lt;br /&gt;நாம் இப்போது ஜெயமோஹனின் கட்டுரைக்கு வருவோம். இவருடைய இக்கட்டுரை மேற்குறிப்பிட்ட வகைகளில் மூன்றாம் வகையில் சேருகிறது. சமூகத்தில் ஓரளவு நல்ல அபிமானத்தை பெற்ற ஒருவரது கட்டுரைகளை ஒரு இளைஞன் படிக்கும்போது பார்ப்பவர்களுக்கும் ஒரு மரியாதை வருகிறது. ஆனால் அவை முன்னிறுத்தும் விஷயங்களில் எவ்வளவு ஆபாசங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் விவரிக்கும், அலசும் விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. M.S. அவர்களின் ஜாதி பற்றிய செய்திகள்&lt;br /&gt;2. அவர் சகநடிகரிடம் கொண்டிருந்ததாக சொல்லப்படும் காதல் குறித்த செய்திகள்&lt;br /&gt;&lt;br /&gt;M.S. அவர்களின் ஜாதி (அவர் பலபேர் நினைப்பது போல் பிராமணர் இல்லை என்ற செய்தி) பற்றி பலருக்கும் தெரிந்தே இருக்கிறது. அவர் பிராமணர் இல்லை என்று அனைவருக்கும் தெரிவிப்பது பற்றி ஒன்றும் குற்றமில்லை. ஆனால் இவர் இதைப்பற்றி சொல்லும்போது, ஒரு சந்தேகம் எழுகிறது. ஒரு மேதையை யாரும் தப்பித்தவறிக் கூட பிராமணர் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என்று பிரயத்தனம் செய்கிறாரென்று தோன்றுகிறது. அவரே அக்கட்டுரையில் நடிகர் விவேக்கைப் பற்றி சொல்லியிருப்பது இதை மேலும் வலுப்படுத்துகிறது.M.S.அவர்கள் இந்த ஜாதிக் கட்டுக்களை தாண்டி சாதித்தார் என்பதை சொல்லவே இந்தக் கட்டுரை, அடுத்த முறை M.S. பாடல்களை கேட்கும்போது இன்னமும் உருகி ரசிப்பீர்கள் என்றெல்லாம் சொல்கிறார். M.S.பிராமணர் இல்லையென்ற செய்தி எந்த அளவு பிராமணர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர் அடைந்திருக்கும் உயரம் அப்படி. மேலும் ஆரம்ப காலத்திலிருந்தே அவரின் பாடல்கள் நிறைய பிராமணர்கள் வீட்டில் ஒலிக்கிறது என்பதும் உண்மை. இது இப்படியிருக்க பிராமணர்கள் அனைவரும் M.S.எதிரிகள் என்று ஒரு தோற்றத்தை கஷ்டப்பட்டு உருவாக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் இளமைக்காதலைப் பற்றிய செய்திகள், அவரின் மரியாதையைக் குறைப்பதாகவே உள்ளன. அச்செய்திகள் உண்மையென்றால் கூட அவற்றை மறைக்கவே நான் முயல்வேன். அவரை ஆதர்சமாகக் கொண்டு நிறைய இசைக்கலைஞர்கள் (இசைத்துறையில் இல்லாதவர்களுக்குக் கூட அவர் ஒரு முன்மாதிரியாக உள்ளார்) உருவாகி வரும் நிலையில் அவர்களுக்கு இச்செய்திகள் நிச்சயம் சோர்வைக் கொடுக்கும். ஏனென்றால் நம் தமிழ்நாட்டின் நிலமை அப்படி. எதிலுமே நம்பிக்கை இல்லாத நாத்திகர் கூட்டம் ஒருபுறம். கடுமையான மதமாற்றத்தில் ஈடுபடும் கூட்டங்கள் ஒருபுறம். இப்படிப்பட்டவர்களின் வெறும் வாய்க்கு இவை அவலாகவே முடியும். இதை எதிர்கொள்ளும் அளவுக்கு வளரும் தலைமுறைக்கு விஷயஞானம் இல்லை. ஜெயமோஹனும் இக்கட்டுரை எழுதிவிட்டு அடுத்த&lt;br /&gt;controversial கட்டுரைகளுக்கு போய்விட்டார். இவர்கள் மாட்டிக்கொண்டு முழிக்கப்போவது நிச்சயம்.&lt;br /&gt;அப்படியென்றால் இதை வெளியிடவே கூடாதா? நிச்சயம் செய்யலாம். ஆனால் அது ஒரு முன்னேறிய, இத்தகைய விஷயங்களை சரியான நோக்கில் புரிந்து கொள்ளும் ஒரு சமுதாயத்திற்கு சொன்னால் நல்லது. இப்படிப்பட்ட சமூகத்திற்கு சொல்லும் போது அவை மேலும் முதிர்ச்சியின்மையை அதிகரிக்கவே செய்யும். எனவே சமூகத்தை முன்னேற்ற முதலில் முயற்சி செய்வோம். அதுவரை இவற்றை மறைப்பது குற்றமில்லையென்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின் என்ற குறளை இங்கே apply செய்யலாமே. இது ஒரு சாதாரண logical விஷயம். மிகவும் குறைவாகவே கற்ற ஒருவனின் எண்ணங்கள். இவை மெத்தப் படித்த ஜெயமோஹனுக்கு தெரியாமலா இருந்திருக்கும்? அப்படியென்றால் இதை ஏன் எழுதவேண்டும்? அவருடைய இணையதளத்தின் வருகை எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள இருக்கலாம். தன்னுடைய இணையதளம் அலெக்ஸா rating-ல் முதல் சில இடங்களில் இருப்பதாக பெருமைப் பட்டுக்கொள்கிறார். அதற்கு இவையெல்லாம் உதவுமே. MF Hussain பற்றி ஒரு கட்டுரை. காந்தி பற்றி பல நல்ல கட்டுரைகள் எழுதுகிறாரே என்று பார்த்தால், அவரை பலவிதத்திலும் கேலி செய்யும் ஒரு வினோதமான கட்டுரை. அதைப் பற்றி அவருடைய வாசகர் ஒருவர் சோற்றில் கல் என்று வர்ணித்திருந்தார். அது உண்மையிலேயே சோற்றில் நரகல் தான். கண்ணதாசனின் கவிதைகள் பற்றிய பதிலில், பாரதியாரைப் பற்றி ஒரு கிண்டல் என்று இணையத்தை கலக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே, ஒரு கட்டுரை அல்லது ஒரு கடிதம் எழுதும்போது விமர்சனத்திற்கு சில வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்டு செல்கிறார். உடனே (நான் உட்பட) சிலர் கடிதங்கள் எழுதவேண்டியது. அது அவரின் இணையதளத்திற்கு பெருமளவில் வருகைகளை அதிகப்படுத்துகிறது. சரி வரும் கடிதங்களுக்கு முறையான பதில் எழுதுகிறாரா என்றால் அதுவுமில்லை. நான் இவருக்கு இக்கட்டுரை தொடர்பாக ஒரு கடிதம் எழுதினேன். அதன் முக்கிய கேள்வியாக டயானாவின் மரணத்தைப் பற்றி எழுப்பியிருந்தேன். அதற்கு “நீ சாதிய உணர்வு கொண்டவன்” என்று முத்திரை குத்தி அனுப்பிவிட்டார். :(&lt;br /&gt;&lt;br /&gt;தன் பிழைப்பை ஓட்டுவதற்காக மலிவான விஷயங்களை முன்னிறுத்தி/ மலிவான முறையில் முன்னிறுத்தி மற்றவர்களை கவர்வது, விலைமாதர்களின் வேலை. அதில் கூட தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு நியாயம் கிடைக்கிறது. ஆனால் இவர்கள்? தன்னுடைய தமிழறிவை, கலைத்திறனை, வார்த்தை ஜாலத்தை இவ்வாறு பயன்படுத்தும் போது ஆபாச அளவு உச்சத்தை அடைகிறது. ஒரு மலிவான முறையில் நடிக்கும் நடிகையை விட இவர்கள் நிச்சயமாக மோசமானவர்கள், கேவலமானவர்கள், சமூகத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலம் முன்பு இவரும் சாரு நிவேதிதாவும் சரிக்குசரி அடித்துக் கொண்டார்கள். பின் இவரின் ஒரு வாசகர் இடித்துக் காட்டியபின் அது நின்றது. அதேபோல் இதுவும் நின்று நல்ல கருத்துக்கள் வருமென்று நம்புவோமாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2984265244439106176-8524699826549379980?l=thumbikaiazhwan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/8524699826549379980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/8524699826549379980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/8524699826549379980'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2009/11/blog-post.html' title='அறிவுஜீவித்தனமான ஆபாசம்!!!'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176.post-5940057836384991341</id><published>2009-10-30T21:01:00.000-07:00</published><updated>2009-11-07T04:38:38.349-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அபத்த களஞ்சியம்'/><title type='text'>காஷ்மீர் நான், நீ பாகிஸ்தான்...</title><content type='html'>சமீபத்தில் வந்த கந்தசாமி படத்தில் வந்த “Excuse me Mr. Kandasamy..." பாடலில் வரும் சுவையான வரிகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;...காஷ்மீர் நான், நீ பாகிஸ்தான், தேறாது டிஷ்யூம் தான்...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு கற்பனை? என்ன சொல்ல முற்படுகிறார்கள்? சண்டையால் பயனில்லை, சமாதானமாக பேசி என்னை ஏற்றுக்கொள் என்றா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் முக்கியமான பிரச்சனையை சுலபமாக ஒரு திரைப்பட பாடலாசிரியர், ஒரு பாலுணர்வை தூண்டும் பாடலில் தீர்த்துவிட்டார் !! அப்பாடலில் கதாநாயகி, தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கதாநாயகனை பலவாறு வேண்டும் போது இப்படிப் பாடுகிறார். இந்த blog post- ஐ நான் எழுதும்போதும், நீங்கள் படிக்கும் போதும் ஏராளமானவர்கள் அங்கே இறந்து கொண்டிருப்பதை மனதில் வைத்து இதைப் படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுப்பின்மையின் உச்சகட்டம் என்று இதை சொல்ல முடியாது. ஏனெனில், நான் இதை எழுதி நீங்கள் படிக்குமுன் திரைத்துரையினர், அடுத்த உச்சியைத் தொட்டு விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Censor board வந்துதான் கத்தரி போடவேண்டும் என்றில்லை. நாமே இது போன்றவற்றை ஒதுக்க வேண்டும். திரைப்படத்துரையினரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர்களுக்கு, அடிப்படையில் எதைப்பற்றியும் ஒரு நம்பிக்கை, மரியாதை இல்லை. So, இதைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் நாம் இவற்றை ஒதுக்கி இவற்றை குறைக்க வேண்டும். அடுத்த முறை இப்பாடல் வானொலியிலோ, அல்லது தொலைக்காட்சியிலோ காண நேரிடும்போது தொடர்ந்து பார்க்க வேண்டுமா என்று யோசியுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2984265244439106176-5940057836384991341?l=thumbikaiazhwan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/5940057836384991341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2009/10/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/5940057836384991341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/5940057836384991341'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2009/10/blog-post_30.html' title='காஷ்மீர் நான், நீ பாகிஸ்தான்...'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2984265244439106176.post-1744842633104864024</id><published>2009-10-30T20:58:00.000-07:00</published><updated>2009-10-30T21:01:47.976-07:00</updated><title type='text'>அனைவருக்கும் வணக்கம்</title><content type='html'>எனக்கு தெரிந்தவற்றை, நடப்பு நிகழ்வுகளைப் பற்றி என் கருத்துகளை பதிவு செய்ய முயல்கிறேன். என்னை விமர்சித்து வளர்க்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;பின்குறிப்பு : உணர்ச்சிவசப்பட்டு , http://thumbikaiazwan.blogspot.com, என்று தவறாக ஒரு blog உருவாக்கிவிட்டேன் (ஒரு post-உம் போட்டுவிட்டேன்) :). So, அதுவும் என்னுடையதுதான். ஆனால் இனிமேல் இந்த blog-ல் தான் என்னுடைய Post-கள் இடம்பெறும். நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2984265244439106176-1744842633104864024?l=thumbikaiazhwan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thumbikaiazhwan.blogspot.com/feeds/1744842633104864024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/1744842633104864024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2984265244439106176/posts/default/1744842633104864024'/><link rel='alternate' type='text/html' href='http://thumbikaiazhwan.blogspot.com/2009/10/blog-post.html' title='அனைவருக்கும் வணக்கம்'/><author><name>தும்பிக்கையாழ்வான்</name><uri>http://www.blogger.com/profile/14189646941585358173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
